“தொடர்ந்து அவ்வப்போது முகநூலில் கவிதைகள் பதிவிட்டு வருகின்றேன். அதில் ஒரு கவிதை ‘அந்தரப் பூ’. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு, ‘பூ மலரக் காத்திருக்கும் செடியடி இரவில் / நட்சத்திரங்கள் பார்க்கப் படாமல் / நழுவிப் போகும் / தானாக நிகழும் இது போன்ற விஷயங்கள்’ என்று எழுதியிருந்தேன். இந்த ‘அந்தரப் பூ’ என்ற சமீபத்திய கவிதையில். ‘மரத்தில், கிளையில், மஞ்சரியில் பார்த்தாயிற்று / கீழ்த்தூரில், மண்ணில் கிடப்பதையும் ஆயிற்று / வாய்க்க வேண்டும் காம்பு கழன்ற பின், தரை இறங்கு முன் / காற்றில் நழுவி வருமோர் அந்தரப் பூ காணல்’ என்று எழுதுகிறேன். ஒரு வேளை நட்சத்திரங்கள் பார்க்கப் படாமல் நழுவிப் போன கணம் தான் இந்த அந்தரப் பூ காணலின் முகமுமோ?!” - கல்யாண்ஜி
“தொடர்ந்து அவ்வப்போது முகநூலில் கவிதைகள் பதிவிட்டு வருகின்றேன். அதில் ஒரு கவிதை ‘அந்தரப் பூ’. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு, ‘பூ மலரக் காத்திருக்கும் செடியடி இரவில் / நட்சத்திரங்கள் பார்க்கப் படாமல் / நழுவிப் போகும் / தானாக நிகழும் இது போன்ற விஷயங்கள்’ என்று எழுதியிருந்தேன். இந்த ‘அந்தரப் பூ’ என்ற சமீபத்திய கவிதையில். ‘மரத்தில், கிளையில், மஞ்சரியில் பார்த்தாயிற்று / கீழ்த்தூரில், மண்ணில் கிடப்பதையும் ஆயிற்று / வாய்க்க வேண்டும் காம்பு கழன்ற பின், தரை இறங்கு முன் / காற்றில் நழுவி வருமோர் அந்தரப் பூ காணல்’ என்று எழுதுகிறேன். ஒரு வேளை நட்சத்திரங்கள் பார்க்கப் படாமல் நழுவிப் போன கணம் தான் இந்த அந்தரப் பூ காணலின் முகமுமோ?!” - கல்யாண்ஜி