Read Anywhere and on Any Device!

Subscribe to Read | $0.00

Join today and start reading your favorite books for Free!

Read Anywhere and on Any Device!

  • Download on iOS
  • Download on Android
  • Download on iOS

அக்காளின் எலும்புகள்

வெய்யில்
4.00/5 (12 ratings)
தாமிரபரணிக் கரையின் செம்மண் புழுதியெல்லாம் பரவியிருக்கும் அக்காள்களின் துயரப் பெருங்கதைகளை, மென் சந்தோஷங்களை, உயிர் எழுத்துக்களை தலைப்பாகவும், பின் மெய்யெழுத்துகள், பின்னர் உயிர்மெய் எழுத்துகள் என்று தலைப்பின் வழியே அக்காள்களின் உணர்வுகளை காட்சிப்படுத்துயிருக்கிறார் கவிஞர் வெய்யில். கோணங்கியின் நூல்வாழ்த்து தொகுப்பின் உக்கிரப்பக்கங்களில் நுழைந்து வந்ததைக் காட்டுகிறது. நூல் திறப்பிலேயே நமது கொடுப்பினையற்ற கையறு நிலை புலப்படுகிறது.

எத்தனை விதமான அக்காள்கள்.. காதல் முகிழும் பருவ வயதினள், சுற்றம் ஏற்காத காதல்வயப்பட்டவள், ரத்த பந்தங்களின் கொலைவாளுக்கு பலியானவள், புதிதாய் திருமணம் ஆனவள், கணவனைப் பிரிந்தவள், கணவனை இழந்தவள்.. அவரவருக்கு சொல்வதற்கு ஆயிரம் கதைகள்.. அதைக் கணவரின் கல்லறையில் இருந்து எடுத்து வந்த முயலிடம் சொல்கிறாள் ஒருத்தி. பேசும் குருவியை தோழியாக்கியிருக்கிறாள் மற்றொருத்தி. காதல் நாய்களுக்கு மறைவிடம் சொல்லித்தரும் கருணைகொண்டிருக்கிறாள் ஒருத்தி. புத்தி காணாத சிறுவனான தம்பிக்காக, கண்களை மூடும் அக்காவின் வெட்டுண்ட தலை வாசிக்கையில் உள்ளூர ஒரு நடுக்கம்.

அக்காளின் எலும்புகள் தட்டுப்படுவதையும், முகூர்த்த புடவை எத்தனை வண்ணங்களில் எரிந்தது தெரியுமா என்று கேட்பதையும், கண்ணீர்த்துளி சொட்டவும் ஆனந்தம் பெருகுகிறது குருதியாய் என்பதையும் நெஞ்சின் அடியாழத்து கத்திக்குத்தென வாசகருக்கு கடத்தியிருக்கிறார் வெய்யில். பனை மரங்களின் வாசனை, புழுதியின் வெம்மை எல்லாம் கவிதையினூடே காட்சியாய் விரிந்து கொண்டே வருகிறது.

எந்த நூற்றாண்டிலிருந்தோ கசியும் ரத்தம் என்ற வெய்யிலின் வரிகள், தாமிரபரணியில் பாய்ந்து செல்வது அக்காள்களின் செந்நீரும், கண்ணீருமே என்று அழுத்தமாய் உக்கிரமாய் சொல்கின்றன.

- ரஞ்சனி பாசு
Format:
Paperback
Pages:
80 pages
Publication:
2019
Publisher:
கொம்பு
Edition:
Language:
tam
ISBN10:
ISBN13:
kindle Asin:
B0DM43RPJP

அக்காளின் எலும்புகள்

வெய்யில்
4.00/5 (12 ratings)
தாமிரபரணிக் கரையின் செம்மண் புழுதியெல்லாம் பரவியிருக்கும் அக்காள்களின் துயரப் பெருங்கதைகளை, மென் சந்தோஷங்களை, உயிர் எழுத்துக்களை தலைப்பாகவும், பின் மெய்யெழுத்துகள், பின்னர் உயிர்மெய் எழுத்துகள் என்று தலைப்பின் வழியே அக்காள்களின் உணர்வுகளை காட்சிப்படுத்துயிருக்கிறார் கவிஞர் வெய்யில். கோணங்கியின் நூல்வாழ்த்து தொகுப்பின் உக்கிரப்பக்கங்களில் நுழைந்து வந்ததைக் காட்டுகிறது. நூல் திறப்பிலேயே நமது கொடுப்பினையற்ற கையறு நிலை புலப்படுகிறது.

எத்தனை விதமான அக்காள்கள்.. காதல் முகிழும் பருவ வயதினள், சுற்றம் ஏற்காத காதல்வயப்பட்டவள், ரத்த பந்தங்களின் கொலைவாளுக்கு பலியானவள், புதிதாய் திருமணம் ஆனவள், கணவனைப் பிரிந்தவள், கணவனை இழந்தவள்.. அவரவருக்கு சொல்வதற்கு ஆயிரம் கதைகள்.. அதைக் கணவரின் கல்லறையில் இருந்து எடுத்து வந்த முயலிடம் சொல்கிறாள் ஒருத்தி. பேசும் குருவியை தோழியாக்கியிருக்கிறாள் மற்றொருத்தி. காதல் நாய்களுக்கு மறைவிடம் சொல்லித்தரும் கருணைகொண்டிருக்கிறாள் ஒருத்தி. புத்தி காணாத சிறுவனான தம்பிக்காக, கண்களை மூடும் அக்காவின் வெட்டுண்ட தலை வாசிக்கையில் உள்ளூர ஒரு நடுக்கம்.

அக்காளின் எலும்புகள் தட்டுப்படுவதையும், முகூர்த்த புடவை எத்தனை வண்ணங்களில் எரிந்தது தெரியுமா என்று கேட்பதையும், கண்ணீர்த்துளி சொட்டவும் ஆனந்தம் பெருகுகிறது குருதியாய் என்பதையும் நெஞ்சின் அடியாழத்து கத்திக்குத்தென வாசகருக்கு கடத்தியிருக்கிறார் வெய்யில். பனை மரங்களின் வாசனை, புழுதியின் வெம்மை எல்லாம் கவிதையினூடே காட்சியாய் விரிந்து கொண்டே வருகிறது.

எந்த நூற்றாண்டிலிருந்தோ கசியும் ரத்தம் என்ற வெய்யிலின் வரிகள், தாமிரபரணியில் பாய்ந்து செல்வது அக்காள்களின் செந்நீரும், கண்ணீருமே என்று அழுத்தமாய் உக்கிரமாய் சொல்கின்றன.

- ரஞ்சனி பாசு
Format:
Paperback
Pages:
80 pages
Publication:
2019
Publisher:
கொம்பு
Edition:
Language:
tam
ISBN10:
ISBN13:
kindle Asin:
B0DM43RPJP