அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் படத்தில் வேலை செய்து கொண்டிருந்த நேரமது. தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொண்ட தோல்விகளால் கடுமையான தற்கொலை எண்ணங்களில் உழன்று கொண்டிருந்தேன். மாதக்கணக்கில் உறங்கமுடியாமல் தவித்ததோடு கடுமையான மன உளைச்சல்களால் மனநல மருத்துவரிடம் சிகிச்சையும் எடுத்துக் கொண்டிருந்தேன். நெருங்கிய சில நண்பர்கள் என்னை அரவணைத்து பாதுகாத்து வந்தனர்.
அச்சமயத்தில் கடப்பாவிலுள்ள அமீன் பீர் தர்காவிற்கு இயக்குநர் வசந்தபாலன் அழைத்துச் சென்றார். தர்காவில் அந்த இரவு கேட்ட ஹவ்வாலி பாடல்களும் அதிகால
அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் படத்தில் வேலை செய்து கொண்டிருந்த நேரமது. தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொண்ட தோல்விகளால் கடுமையான தற்கொலை எண்ணங்களில் உழன்று கொண்டிருந்தேன். மாதக்கணக்கில் உறங்கமுடியாமல் தவித்ததோடு கடுமையான மன உளைச்சல்களால் மனநல மருத்துவரிடம் சிகிச்சையும் எடுத்துக் கொண்டிருந்தேன். நெருங்கிய சில நண்பர்கள் என்னை அரவணைத்து பாதுகாத்து வந்தனர்.
அச்சமயத்தில் கடப்பாவிலுள்ள அமீன் பீர் தர்காவிற்கு இயக்குநர் வசந்தபாலன் அழைத்துச் சென்றார். தர்காவில் அந்த இரவு கேட்ட ஹவ்வாலி பாடல்களும் அதிகால