நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை நம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்க வைக்கின்றன. அவருடைய பார்வை அதிசயமான கூர்மை கொண்டது என்றால் அவருக்குத் தோன்றும் உவமைகள் இன்னும் தனித் தன்மையானவை. 'அந்த கண்கள் அபூர்வமான ஒரு இலுப்பக் கொட்டையைப் பிளந்ததுபோல இரு பக்கமும் கூராக இருந்தன.' இப்படி எழுதும் ஒவ்வொரு வசனமும் ஒரு படிமமாகவே மாறிவிடுகிறது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்வதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் வார்த்தைகள் நம்மையும் அதே விதமான பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.
நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை நம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்க வைக்கின்றன. அவருடைய பார்வை அதிசயமான கூர்மை கொண்டது என்றால் அவருக்குத் தோன்றும் உவமைகள் இன்னும் தனித் தன்மையானவை. 'அந்த கண்கள் அபூர்வமான ஒரு இலுப்பக் கொட்டையைப் பிளந்ததுபோல இரு பக்கமும் கூராக இருந்தன.' இப்படி எழுதும் ஒவ்வொரு வசனமும் ஒரு படிமமாகவே மாறிவிடுகிறது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்வதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் வார்த்தைகள் நம்மையும் அதே விதமான பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.