பாலகுமாரன் இன்று இல்லை. ஆனால் இந்தப் புத்தகத்தின் மூலம் சிலவற்றைப் பேசிவிட்டுச் சென்றதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. நான் யாரோ அவர் யாரோ. ஆனால் என் பத்திரிகையைப் பார்த்துவிட்டு அதற்கு எதாவது நன்கொடை அளிக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதை நினைத்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் யோகி ராம்சுரத்குமார் அவர் மூலம் கட்டளை இட்டிருக்கலாம்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு எனக்கும் அவருக்கும் எந்தச் சந்திப்பும் நிகழவில்லை. போனில் பேச நினைத்தாலும் பேச அவர் விழையவில்லை. அதன்பின் நான் அனுப்பிய விருட்சம் இதழ்களை அவர் பார்த்தாரா என்பது கூடத் தெரியாது. பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில் அவரை வைத்து படம் எடுக்க வேண்டுமென்று நினைத்தேன். அதற்கு அவர் சம்மதமும் தெரிவிக்கவில்லை.
பாலகுமாரன் இன்று இல்லை. ஆனால் இந்தப் புத்தகத்தின் மூலம் சிலவற்றைப் பேசிவிட்டுச் சென்றதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. நான் யாரோ அவர் யாரோ. ஆனால் என் பத்திரிகையைப் பார்த்துவிட்டு அதற்கு எதாவது நன்கொடை அளிக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதை நினைத்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் யோகி ராம்சுரத்குமார் அவர் மூலம் கட்டளை இட்டிருக்கலாம்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு எனக்கும் அவருக்கும் எந்தச் சந்திப்பும் நிகழவில்லை. போனில் பேச நினைத்தாலும் பேச அவர் விழையவில்லை. அதன்பின் நான் அனுப்பிய விருட்சம் இதழ்களை அவர் பார்த்தாரா என்பது கூடத் தெரியாது. பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில் அவரை வைத்து படம் எடுக்க வேண்டுமென்று நினைத்தேன். அதற்கு அவர் சம்மதமும் தெரிவிக்கவில்லை.