ஒரு பெண்ணின் மனப்போராட்டத்தை விவரிக்கும் செல்லப்பாவின் ஜீவனாம்சம் தமிழின் முக்கியமான நாவல். 1960-ல் வெளியான இந்நாவல் இன்று வாசிக்கும்போதும் ஜீவனுடன் இருப்பது வியக்கவைக்கிறது. மனித மனதின் போராட்டங்களை அவ்வளவு நுட்பமாகவும், தேர்ந்த மனோதத்துவ நிபுணரின் லாவகத்தோடும் நாவலில் கையாண்டிருக்கிறார் செல்லப்பா. மிகக் குறைந்த பாத்திரங்களைக் கொண்டு ஒரு அற்புதமான மனோ உலகத்தில் நம்மை சஞ்சரிக்க வைக்கிறார். உறவுகளத் தீர்மானிப்பது அன்பா அல்லது பொருளா என்ற சர்ச்சையை நம்முன் வைக்கிறார். வாழ்வில் புறவயமாக ஏற்படும் ஒரு சிக்கல் அகவயமாக எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது என்பதை மிகச்சிறப்பாக சித்தரித் திருக்கிறார். அடுத்தவர் சொல்லும் வார்த்தை அல்லது வாக்கியத்திலிருந்து அவர்களை அவதானிக்கும் கலையை நோ்த்தியோடும் ஆழ்ந்த புரிதல்களோடும் வெளிப்படுத் தியுள்ளார். மனித மனத்தின் ஆழத்தில் நுழைந்து செல்லும் ஆற்றல் அவருக்குக் கைவரப்பெற்றிருக்கிறது. படிக்கும்போது மூளையில் ஏற்படும் லகரி, மனப்பாய்ச்சல் வார்த்தையில் சொல்லும் தரமன்று. செல்லப்பாவின் ஆகச்சிறந்த படைப்பு என்று ஜீவனாம்சத்தைச் சொல்லலாம்.
ஒரு பெண்ணின் மனப்போராட்டத்தை விவரிக்கும் செல்லப்பாவின் ஜீவனாம்சம் தமிழின் முக்கியமான நாவல். 1960-ல் வெளியான இந்நாவல் இன்று வாசிக்கும்போதும் ஜீவனுடன் இருப்பது வியக்கவைக்கிறது. மனித மனதின் போராட்டங்களை அவ்வளவு நுட்பமாகவும், தேர்ந்த மனோதத்துவ நிபுணரின் லாவகத்தோடும் நாவலில் கையாண்டிருக்கிறார் செல்லப்பா. மிகக் குறைந்த பாத்திரங்களைக் கொண்டு ஒரு அற்புதமான மனோ உலகத்தில் நம்மை சஞ்சரிக்க வைக்கிறார். உறவுகளத் தீர்மானிப்பது அன்பா அல்லது பொருளா என்ற சர்ச்சையை நம்முன் வைக்கிறார். வாழ்வில் புறவயமாக ஏற்படும் ஒரு சிக்கல் அகவயமாக எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது என்பதை மிகச்சிறப்பாக சித்தரித் திருக்கிறார். அடுத்தவர் சொல்லும் வார்த்தை அல்லது வாக்கியத்திலிருந்து அவர்களை அவதானிக்கும் கலையை நோ்த்தியோடும் ஆழ்ந்த புரிதல்களோடும் வெளிப்படுத் தியுள்ளார். மனித மனத்தின் ஆழத்தில் நுழைந்து செல்லும் ஆற்றல் அவருக்குக் கைவரப்பெற்றிருக்கிறது. படிக்கும்போது மூளையில் ஏற்படும் லகரி, மனப்பாய்ச்சல் வார்த்தையில் சொல்லும் தரமன்று. செல்லப்பாவின் ஆகச்சிறந்த படைப்பு என்று ஜீவனாம்சத்தைச் சொல்லலாம்.