நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறி கவிழுந்து விடுகிறது . இப்போது அந்த சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பவத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்த சட்டகத்திலும் மாட்ட இயலாது. இந் நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனிதப் பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது.
நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறி கவிழுந்து விடுகிறது . இப்போது அந்த சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பவத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்த சட்டகத்திலும் மாட்ட இயலாது. இந் நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனிதப் பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது.