கர்னாடகாவில் கோலோச்சியிருந்த நாடக கம்பெனிகளில் பணியாற்றும் மனிதர்களின் வாழ்க்கையின் நிகழ்வுகள்ஒழுங்கான தயாரிப்பும் சரியான விநியோகமும் இல்லாததால் வாசகர்கள் கவனத்துக்கு வராமலே போய்விட்ட ஒரு மாத நாவலைப் பல ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக நான் படிக்க நேர்ந்தது. விட்டல் ராவ் எழுதிய 'மூங்கில் முளை' என்ற அந்த மெலிதான புத்தகம் என்னை சற்று ஆச்சரியப்படுத்தியது. மனித உறவுகள் பற்றிக் கதைகள் எழுதுவதிலும் திரைப்படங்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதுவதிலும் நவீன ஓவியங்களைப் படைப்பதிலும் ஈடுபாடுள்ளவராக நான் அறிந்திருந்த விட்டல் ராவ் நாடகத்துறை பற்றியும் கொண்டிருந்த ஆர்வத்தையும் பரிச்சயத்தையும் அந்த நாவல் எனக்குத் தெரியப்படுத்தியது.
கர்னாடகாவில் கோலோச்சியிருந்த நாடக கம்பெனிகளில் பணியாற்றும் மனிதர்களின் வாழ்க்கையின் நிகழ்வுகள்ஒழுங்கான தயாரிப்பும் சரியான விநியோகமும் இல்லாததால் வாசகர்கள் கவனத்துக்கு வராமலே போய்விட்ட ஒரு மாத நாவலைப் பல ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக நான் படிக்க நேர்ந்தது. விட்டல் ராவ் எழுதிய 'மூங்கில் முளை' என்ற அந்த மெலிதான புத்தகம் என்னை சற்று ஆச்சரியப்படுத்தியது. மனித உறவுகள் பற்றிக் கதைகள் எழுதுவதிலும் திரைப்படங்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதுவதிலும் நவீன ஓவியங்களைப் படைப்பதிலும் ஈடுபாடுள்ளவராக நான் அறிந்திருந்த விட்டல் ராவ் நாடகத்துறை பற்றியும் கொண்டிருந்த ஆர்வத்தையும் பரிச்சயத்தையும் அந்த நாவல் எனக்குத் தெரியப்படுத்தியது.